Wednesday, November 5, 2008

கொஞ்சும் மழலை மிழற்றும் பிஞ்சு மகளே




என் அருமை மகளே...

சிட்டு விழி தான் மலர
பட்டு இதழ் முதல் விரிய
ஈர முத்தம் மனம் பரப்ப
நெஞ்சில் நிறைந்த என்னவளே
சித்தம் குழம்பி நிற்கையிலே
பித்தம் நிறைந்து மலைக்கயிலே
நித்தம் உணர மலர்ந்தவளே
காதல் தந்த சின்னவளே
நெஞ்சில் நிறைந்த பூ மகளே
வாழ்வை சுவைக்கும் பொறுமை தனை
வானம் நிறைய கொடுத்துவிடு
உந்தன் சின்னசேட்டைகளை
உள்ளம் நிறைய வாங்கிக்கொண்டு
எல்லை இல்லா இன்பத்திலே
என்றும் வாழும் பொறுமை மட்டும்
இறைஞ்சி இறையை வணங்குகிறேன்...